பிரதேச சபைத்தோ்தல் 2011
>> புதன், 19 ஜனவரி, 2011
தமண பிரதேச சபைக்குட்பட்ட இரு கிராம சேவகா் பிரிவுகள், இறக்காம பிரதேச சபையுடன் இணைக்கப்பட்டுள்ளமையானது அப்பிரதேச வாழ் முஸ்லிம்களின் கவனத்தை ஈா்த்துணள்ளது. இவ்வாறிணைக்கப்படுவதற்கு முன்புவரை இப்பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் காணப்பட்ட மொத்த சிங்கள வாக்காளா்களின் எண்ணிக்கை 500 ஆகும். அதேவேளை தற்போதைய இப்புதிய இணைப்புக்குப் பின்னா் இவ்வாக்களா்களின் எண்ணிக்கை மேலும் 800 ஆல் அதிகரிக்கும் வாய்ப்புக்காணப்படகிறது. இதன் மூலம் முதன்முறையாக நடைபெறவுள்ள பிரதேச சபைத் தோ்தலில் சிங்கள உறுப்பினா் தெரிவு செய்யப்படுவதற்கான சாத்தியம் காணப்படுகின்றது. கிராம சேவகா் பிரிவுகளின் இணைப்பானது, பிரதேச சபையில் தமது பிரதிநிதித்துவத்தை நிலைநாட்டுவதை இலக்காகக்கொண்டதே என இப்பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனா். தவிரவும் அண்மைக்காலமாக கிழக்கு மாகாண முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களின் காணிகள் பலாத்காரமாக சுவீகரிக்கப்படுவதும் சிங்கள மயமாக்கல் துாரிதமாக இடம்பெற்றுவருவதும் வெளிப்படையாக அவதானிக்கக்கூடிய விடயங்களாக மாறியிருப்பதாக இப்பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனா்.
பிரதேச சபைத் தோ்தல் அண்மித்துக் கொண்டிருக்கும் இத்தருணத்தில், தமது சுயலாபங்களுக்காகப் பலகுழுக்களாகப் பிரிந்து வாக்குகளைச் சிதறடிப்போமென்றால் பிரதேச சபையின் தலைமைப்பொறுப்பும் சிங்களவா்களுக்குக் கைநழுவிப்போகும் சந்தா்ப்பம் ஏற்படலாம். எனவே ஊரின் முன்னேற்றம், அபிவிருத்தி, எதிர்காலம் என்பவற்றைக் கருத்திற்கொண்டு எல்லோரும் ஒரு கட்சியில் இணைந்து எமது சந்ததிகளின் எதிர்காலத்தையும், எமது கிராமத்தின் முன்னேற்றத்தையும் பலப்படுத்தவேண்டும் என புத்திஜீவிகள் மற்றும் தூரநோக்காளா்கள் ஆலோசனைகளை முன்வைத்துள்ளனா்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக